கடலின் காதலன்

Showing posts with label புலம்பல். Show all posts
Showing posts with label புலம்பல். Show all posts

Tuesday, October 12, 2010

XXX பொம்மை

சிலை வடித்த தூமைக்குருதிக்கு
உறுப்பிழந்த மூடக்குறவன் நான்
விழிக்கு மாற்று இங்கே இதயம் ..

ரட்சிப்பவளின் கரங்களுக்கென நெய்து
வைத்திருந்த என்னை வெடுக்கென பிடுங்கி
பாவித்து வீசினாய் .. வேசலின் குளித்த
முப்பெருக்கல்குறியிட்ட பொம்மை இனி நான் .

ஒளி புக நடுங்கும் யாருமற்ற இரவில்
என் மீது வீசத்தொடங்குகிறது
நான் வெறுக்கும் கிகோலாவின் வாசனை !!!

Tuesday, October 5, 2010

பார்பி பொம்மையின் தோழி !!!

கழுகின் நகக்கால்கள் கைவிரல்களின் மடங்கில்
பெருகிநிற்கும் கரங்கள் கீறும் வேதனை
மிடறு விழுங்கி உடையும் குரலில்
உன் " Miss you "

தனிவெறுமை மகாசமுத்திர நினைவலைகளின்
நிசப்த பேரிரைச்சல் டெசிபல் அளவுகளின் எல்லை.
தாள இயலாதது ..

பார்பி பொம்மையின் தோழி; கிலுவைதளிர்
பாத தேவதையின் ஆசி பெற்றவன்
நாட்களை கொன்றபடியிருக்கிறேன் அன்பே ..

காத்திரு ..
.
.
.

டெடிபியர்களும், பார்பிக்களும் எனக்கான
"ப்பா" க்களை தின்று தீர்த்து கொண்டிருக்கின்றனவாம்

என்ன செய்ய ?? :((

Wednesday, September 22, 2010

கிரீன் டீ வித் நிலா

இன்று, 22 / 09 / 2010 - புதன், கீழை மலேசியா - அழகொழுகும் சபா , (SABA )

இந்த நடுக்கடலுக்கு அருகில் இருப்பது லபுவான் (LABUAN ) தீவின் துறைமுகம் .
இன்று நிலவு பார்த்தீர்களா நண்பர்களே ??
என் இருப்புக்கு அல்லது கடல் மட்டத்திற்கு ஏறக்குறைய 38 இலிருந்து 40 டிகிரி வரை இருக்கலாம் நிலவிருப்பின் கோணம் . இதை எழுதும் கணம் இன்னமும் அதிகப்படுத்தி கொண்டிருக்கலாம் தன் பாகையை.
அந்த நீல போர்வைக்குள் விழுந்திருக்கும் ஓட்டையில் நண்டு வாய்பிளப்பது போன்றான கறை , ஒருவேளை இப்படி நிகழ்திருக்கலாம் என்றோ ஒருநாள் அந்த நீல சல்லாதுணிக்கு பின்னால் இருந்த வெளிச்ச உலகிலிருந்து இப்பூமி துணியை துளைத்து கொண்டு விழுந்திருக்கலாம் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறது போலும் இந்த ஓட்டை வழியே அவ்வுலகம் . காயம் துடைக்கும் விரவிய பஞ்சுகளை இல்லை பக்க வாதம் கண்டு இடப்பக்கம் வாயோடு கைகால் விளங்காமல் போன என் ஊர் உடையார் வீட்டு கிழவியின் நரை வெளுப்பை நியாபகப்படுத்தி கொண்டிருகிறது நிலவின் விளிம்பை கவ்வி துடைக்கும் டிஷு பேப்பர் மேகங்கள் . என் வரையில் திருமணப்பெண் முகத்தில் ஒளிர கிடைக்கும் நான் பெயரறிந்திரா அந்த பொன்னிற துணுக்குகள் உடுக்களாய் ஓரிரண்டு மட்டுமே எனக்கான இன்றைய வானத்தில் . பதினைந்து கிராம் கல்லுக்கே அதிர்ந்தலையும் தென்சீனக்குளம் மன்னிக்க தென் சீனக்கடல் .
எங்களுக்கென்றே சேவை செய்யும் கடலூர்திகள் தூரத்தே மினுக்கி கொண்டிருக்கிறது .

போனமுறை வானூரும் பயணத்தில் MH (malaysian hospitality ) இல் வாசிக்க கிடைத்த KK
(kota kina balu ) பற்றிய ஒரு கட்டுரையில் மலேசியா புகைபட கலைஞனின் ரசனை இப்படியாக வாசிக்க கிடைத்தது " என் பிறப்பிடம் என்ற வகையில் இவ்விடம் மீதான காதலை தவிர்த்து காதலிக்கவும் இருக்கிறது பச்சைதேநீர் கோப்பையுடன் என் வீட்டு வாயிலில் இருந்த படி மலையை குடிப்பது ."
சற்றுமுன் தேநீர் இடைவேளைக்கென Main deck (கப்பல் மேற்தளம் ) coffeeshop இல் Green tea யோடு நிலா தின்றதில் புலம்பி தொலைத்துவிட்டேன் இதை .
நம்ம ஊர்ல எப்படிங்க மழை பெய்யுதா? இல்ல நிலா தெரியுதா ?

Sunday, July 11, 2010

கடலாடி

கருத்த உடல் வெளிர்தேமல்கள் பேராழியின்
குறைஆழ ஓவியப்பிரதேசங்கள் ..

மஞ்சள் அலகு நீருறைப்பறவைகள் நிகழ்த்தி
காட்டும் பெருமீன்களுக்கு தப்பி திகில் நாடகம்

அலைதலைகளை கொய்துவிடுகின்றன
சுக்கான் வழிநடக்கும் புரப்பெல்லர் இறகுகள்

கட்டளைகள் ஏற்றுவித்து உலோக முலாம்
பூசப்படுகின்றன இயங்கும் மூளைகள்

இயந்திர மிருகமான கடலாடியென் முலாம்
படர்ந்த மூளையை அரிக்கத் தொடங்குகிறது
நாட்காட்டி நிர்வாணப்பெண் நிழற்படம் ..........