கடலின் காதலன்

Wednesday, May 19, 2010

??????????????????????????????????

அக்னிப்பாலையின் இரவு நிலவின் ஒளியூற்றி இறுக்கும் உனக்கான சொற்களில் மோகத்தின் பிம்பம் .ஜன்னல் ஊடித்திரும்பும் நிலவில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் உன்னுருவம் .பின்னாட்களில் உன்னை புணர்வேன் காதல் பொய்யின் பெயரால் .உனை தின்பதற்கான எனை தயாரிக்கும் உன் சொற்களின் காதலில் காமத்தை மட்டுமே வழித்தெடுக்கும் என் மிருகம் . பிரிவின் புவியியற் தொலைவின் இடைவெளி பிரதேசங்களை நீ மட்டுமே நிரப்புகிறாய் அன்பூற்றி பொய்யன் எனக்கு .
உன் வயிற்றின் சுருக்க வரிகளில் எழுதப்பெற்றிருக்கும் அவனின் காதலுக்கு நிகரில்லா இச்சுயனலமியின் மீது உனக்கெதற்கு நேசம் ???. தயவுசெய்து என்னிடம் முத்தத்தில் காதலை எதிர் பாராதே எனக்கு தேவை நீ என்னும் உடல் ..
பசிக்கலையும் தெருவிலங்கின் குணாதிசயம் நிரம்பிய எனை உனக்கு துலாக்கோலிடாதே !!. ஒரு குரூபிக்கு காதலை பரிசளிக்கிறாயே உன் தெரசாதனத்தை என்னவென்று சொல்வது . அடி பையித்தியக்காரி.........................


24 comments:

விஜய் said...

நல்லாருக்கு பாலா

ரொம்ப நாளாச்சு பாத்து

பணிச்சுமையோ ?

வாழ்த்துக்கள்

(இச்சுயனலமியின்) ந வரும்

விஜய்

பத்மா said...

பாலா ஒரு மாதம் காத்திருந்தது வீண் போகவில்லை .
காதலை எதிர்பாராதே என கூறுவதே காதலால் தான் .....
இடத்தால் ஏற்பட்ட பிரிவு போகையில், தான் பொய்யன் என கருதும் ஒரு நிஜத்தின் பிம்பம் வெளிவரலாம் ..
அருமை பாலா !
தமிழின்பம்

கமலேஷ் said...

ரொம்ப அழகா வசிகரமா எழுதறீங்க பாலா...

Unknown said...

m ayiram kuchila adi vaangina maathiri irukkum la nallaa irukku maams

இனியா said...

எனக்கான பதிலில் உனக்கான கேள்விய கேட்டு இருக்கும் உனக்கு என்னோட பதில்.
I lov u bala.

சிவாஜி சங்கர் said...

//இனியா said...

I lov u bala. //

Mee 2 Anne...... :)

சிவாஜி சங்கர் said...

அண்ணா., நெடுநாள் பிறகு.. :) ம்ம்ம்.. அசத்தல் தான் கொஞ்சம் மாறிடீங்க போல தோணுது..?

சிவாஜி சங்கர் said...

//பிரிவின் புவியியற் தொலைவின் இடைவெளி பிரதேசங்களை நீ மட்டுமே நிரப்புகிறாய் அன்பூற்றி பொய்யன் எனக்கு .// :)

சிவாஜி சங்கர் said...

அடி பையித்தியக்காரி-ன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.. :) :(

ANU said...

அருமை பாலா!!!!

சத்ரியன் said...

பொலம்பித்தொலை.

பாலா said...

நன்றி விஜய் அண்ணா
வாங்க பத்மா நன்றிங்க
நன்றிங்க கமலேஷ்
வாங்க இனியா ( நீங்க தவறான முகவரிக்கு வந்துருகீங்கன்னு நினைக்கிறேன் )
நன்றி தம்பி சிவாஜி
வாங்க அனு
அட மாம்ஸ் வாங்க

sakthi said...

சத்ரியன் said...

பொலம்பித்தொலை


repeattuuuuuu

sakthi said...

ஜன்னல் ஊடித்திரும்பும் நிலவில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் உன்னுருவம்

ayyo mudiyala da thambi

sakthi said...

பசிக்கலையும் தெருவிலங்கின் குணாதிசயம் நிரம்பிய எனை உனக்கு துலாக்கோலிடாதே !!

ssshhhhhhhhh

sakthi said...

100 adithathuku valthukkal

பாலா said...

@ சக்தி
நன்றி க்கா

இனியா said...

வாங்க இனியா ( நீங்க தவறான முகவரிக்கு வந்துருகீங்கன்னு நினைக்கிறேன் )

neengal unmaiyil oru suyanalamithaney, naanarinda ondrai.................

சிவாஜி சங்கர் said...

//neengal unmaiyil oru suyanalamithaney, naanarinda ondrai.................//

அண்ணா அண்ணி என்ன சொல்றாங்க..?
kikikiki.... ;)

பத்மா said...

பாலா இங்க எதோ ஒரு காமெடி ஓடுது போல :)))

பத்மா said...

சிவாஜி சங்கர் கொஞ்சம் காண்டா இருக்கோ? ஹிஹிஹி

பாலா said...

வாங்க பத்மாக்கா உங்க பங்குக்கு எதுனா சொல்லிட்டு போங்க
:(

இனியா said...

என்ன அன்பரே, இனி இனியாவுக்கு பதில் எப்போ கிடைக்கும்.

சிட்டுக்குருவி said...

கொடுமையா இருக்கே கவிதை

டெரர் ரைட்டர் தான்

:(((