சிலை வடித்த தூமைக்குருதிக்கு
உறுப்பிழந்த மூடக்குறவன் நான்
விழிக்கு மாற்று இங்கே இதயம் ..
ரட்சிப்பவளின் கரங்களுக்கென நெய்து
வைத்திருந்த என்னை வெடுக்கென பிடுங்கி
பாவித்து வீசினாய் .. வேசலின் குளித்த
முப்பெருக்கல்குறியிட்ட பொம்மை இனி நான் .
ஒளி புக நடுங்கும் யாருமற்ற இரவில்
என் மீது வீசத்தொடங்குகிறது
நான் வெறுக்கும் கிகோலாவின் வாசனை !!!

