கடலின் காதலன்

Sunday, March 7, 2010

கொலைநிகழ்த்துதல்!

வனமுறை புலியின் தந்த வடிவ பற்களின்
காவி நிறத்தில் ஒளிந்திருக்கிறது மான்
இரத்த வீச்சம் ..........
இதழில் ஒழுகும் குருதியை துடைத்தபடி
நிற்கிறேன் பழுப்புநிற மிருகக்கண்கள்
சுமந்தபடி கொலைவெறி மிக ...
நாசுழற்றி மிருகமிளைப்பாற .
"நான் " துடிக்கிறது இறந்துகொண்டிருக்கும்
பிரியத்தை ஏந்திய படி .
இமைதுடிக்க !!உயிர் இருக்கிறது
ஓடிக்கொண்டிருக்கிறேன் எங்கோ !

19 comments:

Unknown said...

Nalla eruku

Unknown said...

"நான் " துடிக்கிறது இறந்துகொண்டிருக்கும்
பிரியத்தை ஏந்திய படி .
இமைதுடிக்க !!உயிர் இருக்கிறது
ஓடிக்கொண்டிருக்கிறேன் எங்கோ


Pirivin thuyaram kodumaiyanathu
rompa alzaka solli erukinga...
Rasikamudiya villai vaethanaiyin varikalai ...valikuladan Aruthal sollukiren

Unknown said...

valthukal bala

நட்புடன் ஜமால் said...

ராஸா நீங்களும் போட்டாச்சா ...

அரங்கப்பெருமாள் said...

படிக்கவே பயமா இருக்கு...

சிவாஜி சங்கர் said...

நல்லாருக்கு அண்ணே..
டெரர் கவிதை.. கொஞ்சம் பயந்துட்டேன்... ஹிஹிஹி..

Kumaresan said...

மனித குமுறல் முடிந்துபோயினவா...
நேயத்துடன் அன்புசோதரன்.

ராகவன் said...

அன்பு பாலா,

உயிர் பிதுங்குவது விழிகளில் தெரிகிறது... ஒட்டிக்கொண்டிருக்கும் சதைத்துனுக்குகளில் மிச்சமாய் இருப்பது எந்த மிருகம்...? ஓலத்திலும், மூச்சிரைப்பிலும், கசியும் ரத்தத்திலும் கடத்துகிறது நானை... அலைந்து திரியும் நான், இறை தின்று முடித்த பசித்த வன்புலியின் மேலமர்ந்து இளைப்பாறும் அடுத்த கவிதையை யோசித்த படி.

கொன்னுட்டீங்க... எனக்கு ரொம்ப பிடித்தது... வன்முறை பிடிக்காதவன் யார் இந்த உலகத்தில சொல்லுங்க... எல்லோருக்குள்ளும் இருக்கிறது இந்த ரத்தம் சுவைத்த நாக்கும், கடைவைப்பல்லில் மிச்சமிருக்கும் கறி ருசியும்.

இறந்து கொண்டிருக்கும் பிரியத்தை சுமந்தபடி என்று ஒரு கவிமனம் ஒரு காற்புள்ளியை வைத்து தொடரும்... என்று முடிக்கும்

அன்புடன்
ராகவன்

Thenammai Lakshmanan said...

//வனமுறை புலியின் தந்த வடிவ பற்களின்
காவி நிறத்தில் ஒளிந்திருக்கிறது மான்
இரத்த வீச்சம் //

அருமை பிரமிப்பாய் இருக்கு பாலா

vidivelli said...

supper.............
very nice........

you come to my said.........

பாலா said...

@பிருந்தா நன்றி சகோதரி பிருந்தா
@ஜமால்
நன்றிங்க ஜமாலரே
@அரங்கப்பெருமாள்
வாங்க அண்ணே பயப்படாதீய
@சங்கர்
நன்றி தம்பி
@ குமரேசன்
நன்றி சகோ
@ராகவன்
நீங்க பின்னூடத்துக்கு தரும் உழைப்பின்
அளவுக்கு நான் கவிதைக்கு தருகிறேனா
என்பது சந்தேகமே ராகவன்!!! பெரியதொரு நன்றி
@தேனக்கா
நன்றிங்கோ
@விடிவெள்ளி
நன்றி நண்பரே உங்கள் பக்கமும் வருகிறேன்

Nathanjagk said...

பிரியமிகு சோழரே,
துடிப்பும் ஆவேசமுமாய் ஆர்ப்பரிக்கிறது கவிதை!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அன்பு பாலா

உங்கள் தளத்துக்கு இன்றுதான் வந்துள்ளேன்.

வேகமாய் வார்த்தைகள்
தெரித்து ஓடும் வெண்புரவியாய்
நறுக்கென சொல்லால்
கட்டுண்டேன் அருமையாய்.

மிக அருமையாக உள்ளது கவிதை.

விஜய் said...

நன்றாகவே நிகழ்த்தியுள்ளீர்கள் கொலையை

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

பாலா said...

வாங்க ஜெகன் அண்ணா நன்றியும் கூட
வாங்க ஸ்டார்ஜன் . நன்றி.
வாங்க விஜய் அண்ணா

பா.ராஜாராம் said...

//"நான் " துடிக்கிறது இறந்துகொண்டிருக்கும்
பிரியத்தை ஏந்திய படி .//

இங்கு ஒரு சுழற்சி இருக்கு மாப்ள.

சொய்ங் என சொருகுது.

பாலா said...

வாங்க மாம்ஸ்

சிட்டுக்குருவி said...

//உயிர் இருக்கிறது ஓடிக்கொண்டிருக்கிறேன் எங்கோ //

கனவுலயா!!!!!

புரியர மாதிரி இருக்கு ஆனா பிரியல

Anonymous said...

இனிய பாலா, இத்தனை தூரம் துயரம் சொல்லும் வலிமை எப்படி வந்தது? வலிக்க வலிக்க படித்து முடித்து....முடியாமல் தொடர்ந்தேன். பிரியம் பிரியும் வலி புரிந்த பாலாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
(ithayasaaral.blogspot.com)