கடலின் காதலன்

Friday, May 8, 2009

தேடல்

அவளைக்காணவில்லை

முற்பகலில் தேடத்தொடங்கினேன்

வெக்கை

வெளியேயும் உள்ளேயும்

.

.

முன்னிரவிலும் கிட்ட வில்லை

காலத்துளிகள் இற்று உதிர்ந்து போயின !

பின்னிரவில் நெருப்பாய் தகிக்க

தொடங்கினேன் !!

.

.

கருக்கலில் அருகம்புல்லில்

அரும்பிய பனித்துளியொன்றில்

கண்டெடுத்தேன்

இதயத்துசெல்களை

பூக்களாய் புஷ்பிக்க செய்து

அர்ச்சிக்கத் தொடங்குகிறேன்

.

அவள் கால் சுண்டுவிரலால்

சீண்டப்பட்டு

சிரித்து விழுகின்றன அவை !!!

இதயம் செல் உற்பத்தியில்

சாதனை செய்யும் விதமாய்

உமிழத்தொடங்கியது

பூக்களை !!!!

.

எங்களை ஒதுக்கித்தள்ளி

ஓடிக்கொண்டிருக்கின்றது

காலவெளி

சிறு ஓடையென !

.

சட்டென்று நுகர்கிறேன்

அவளை

ஏதோ ஒன்று தூக்கி எறிகிறது

எனை !

அதொரு வெட்ட வெளி

அந்திமம்

ஏதேதோ வாசனைகள்

எண்ணப்பிதற்றல்கள்

இப்போழ்து

என்னைக்காணவில்லை !!!!!!!!!(?)..........................

8 comments:

S.A. நவாஸுதீன் said...

மீண்டும் ஒரு தேடல் இங்கே!. நல்லா இருக்கு பாலா. வழக்கம்போல் வரிகள் அனைத்தும் அற்புதம். இன்னொரு சிறப்பு, முன்பை விட கொஞ்சம் எளிய தமிழில் முதல் முறைப் படித்ததும் புரியும்படி ரசிக்கும்படி இருக்கின்றது.

கவி அழகன் said...

ரசித்தேன்... !

பாலா said...

nandri navas(puriyutha)
vaanga kavikizhavan

அப்துல்மாலிக் said...

தேடல் அருமைய் பாலா

ஒவ்வொரு எழுத்தும் சொல்கிறது அழகான வரிகளை

பாலா said...

nandr abhu

sakthi said...

alagana kavithai bala

புதியவன் said...

நல்லா இருக்கு பாலா இந்த தேடல்...

பாலா said...

vaanga akka
nandri puthiyavan