கடலின் காதலன்

Saturday, February 27, 2010

நார்சிச நாயகி!!!!!!!!!!!!!!!!!!

செம்புலப்பரப்பகழ் கிழங்கென பிரசவித்த
ப்ரியமெனும் தூயம் உனக்கேயானது ..

முலையூட்ட நாவறண்டழும் குழந்தைஎனும்
நானுக்கு
கிளாவர் கிலுகிலுப்பை நீட்டும் மரக்கரம் உனது.

பிரேதம் சூடி செருப்பு காலுக்குள் உடல் நசுங்க
தீர்ப்பிடும் கோல் உன்னது .

வியந்து கொள் நார்சிச நாயகி!!!! இதெற்கெல்லாம்
சேர்த்தழும் எவன் கையும் துடைக்கவியலா
உன் கண்ணீர் உனக்கேயானது .....


"" எதிர் பார்ப்பின்றி அள்ளித்தரும் நேயம் கபடறியாதது தோழி "" நேசமித்ரன்