கடலின் காதலன்

Thursday, January 14, 2010

ஒருநாள் (கள்)!!

ஒருநாள்

தார்ச்சாலை நான்முனை சந்திப்பின்
மஞ்சள் விளக்கு சமிக்ஞையாய்
நகர்த்தி விட்டிருக்கிறோம் நாட்காட்டி
தினங்களை !!!

.
பத்தங்குல நம்மிடைவெளியில் புதைந்து
கிடக்கிறது ஆதிமனித உணர்ச்சிகுறிப்புகள்

.
பாண்டி ஆடும் சிறுமி கைசிறகடித்து
மையநோக்கு விசை சமன் செய்யும்
வித்தை பழகி நிற்கிறேன் நமக்கான
ஒற்றை நூலிழைமுன் ...

................................................................................................................
இன்னுமொரு நாள்

மீட்டு நம்மிடை ஒற்றை
வயலின் இழையை
ஒவ்வொரு மீட்டலுக்கும்
பொடிந்து கொட்டுகிறது
இதயம்


...............................................................................................................
மற்றுமொருநாள்

தயவு செய்து பேசாமல்
எனை வதை !
ஊடலின் தேவமொழி
மௌனம் !


...............................................................................................................
குறிப்பு :
மேற்கண்டதில் முதற் கவிதை(?) அந்த ஒற்றை நூலிழை முன் தள்ளாடி கொண்டிருக்கும் மாப்பி செய்யதுக்கு !!..
தலைப்பில் இலக்கண பிழை இருப்பின் மேன் மக்கள் மன்னிக்க .......

Wednesday, January 6, 2010

பெருமெளனம்..

கன்னமயிர்களுள் ,சிகரெட் தின்ற உதட்டினுள்
புறக்கைகளில் முகலாயப் பெருங்கண்ணீர்
முத்தங்கள்.

ஆக்டோபஸ் கரங்களால் இரவெனை
கற்பழித்த நாட்களின் கொடூரம்

கழிவறை கண்ணாடியில் தெரிகிறது
கொலைவெறி மிகுந்தவென் கண்கள்

அவளருவத்தை புணர்ந்து தீர்த்த
திருப்தியில் நிகழ்த்தத்தொடங்குகிறேன்
பெருமெளனம்..

மச்சநிறம் மொழியின் வளைவுகளாய்
அவள் பெயர் நீண்ட கரத்தில்
அறுந்த தமனி வழி கசிகிறது
அவளோடு ஹீமோகுளோபின் திரவம் ..........

பி.கு
அப்பாடி......................(பெரு மூச்சு )
இது "உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு " நடத்தும் " உரையாடல் கவிதைப் போட்டி" க்காக எழுதியது