நீர்த்துக்கிடக்கிறது நம்
பரண் இரவுகளின் தொகுப்பு .
குசலவிசாரிப்புகள் ,சிறுஎள்ளல்
உண்டுகளைத்தாயா ?,நள்ளிரவு
காலைவணக்கம் .
சத்தற்ற பிதற்றல்கள் மின்னரட்டைப் பிணைப்பில் .
எட்டித்தெளிய முடிமின் சிரம் நுழைத்திருப்போம்
உன்னுள்ளும் என்னுள்ளும் !!!!
எத்தனை உருகி எழுதி கிழித்ததென்ன ?
இந்தாடா உதட்டுச்சாய முத்தமென
தவறியேனும் விழமறுக்கிறதுவுன்
எச்சிற் பூசிய சொற் பிண்டம் .
காகித சிறைக்குள் செந்தூரம்
சிவந்து போகிறது ஓரங்களை
*****???காதல் ????!!!!!
அச்சத்தின் மூலப்பிடியில்
சிக்கித்தவிக்கின்றன
இரத்தமிறைக்கும் இயந்திர
நாளங்கள் !!
இனி எந்நொடியும் சாத்தியமில்லை.
உன்னுள்ளானவென் பிம்பத்தை அழி
என்னுள்ளும் கொன்றேவிடுகிறேனுனை .
வா கை சேர்
மறுகட்டமைப்போம்
புதிதாயுன் பேர் சொல் !
இம்முறை சென்றேயாகவேண்டும்
மானிதரற்ற மலர்சமைந்த
பிரபஞ்சத்துள் !!