கடலின் காதலன்

Tuesday, October 27, 2009

கடை காய்கிறது ????????????

அமுத போதை விட இன்பம்

சரிவிகித கலவையில் புகட்டப்

பெறுதல் செல்லிடைப் பிணைப்பில் !!

.

ஒரு சொல் ஒரே சொல் !!

கோடிகளில் கொலையவும்

உயிர்த்தெழவும் !!!!

.

மொழிஊனம் ! நீ நவில்

உணர்ச்சி பாஷை

ஒரு சொல் ஒரே சொல்லில் !!!

.

சுவாசத்துளை துணையில்

கிசுகிசுக்கும்

உன் வார்த்தை என் பெயர்

மதுவுண்ட புரவியொத்து

தறிகெட்டு விரைகிறது

குருதி வழங்கி !!!!!!!!!!

.

வண்ணப்பூச்சிகள் சூழ்

மலரிதழ் எஸ்ஸன்ஸ் கமழ்

ஸ்படிகக்கற் சமை பிரபஞ்ச

கடவுச்சொல் யாசித்தலின்றி

கையளித்தவள்!!!

.

முட்டையழி விடாய் நாட்கள்

அடிவயிற்றின் துடித்தலுக்கு

ஒத்தடமிட வலுவில்லை

என்னுதட்டிற்கும் வார்த்தைப்பிண்டங்களுக்கும்

.

உன்னிடம் இன்பத்தை (மட்டுமே ) யாசிக்கும்

ஆண்மையின் பிச்சைக்கரங்கள்

கு.கு .

கடை காய்ந்து கொண்டிருந்த காரணத்தால் இந்த ஒரு மொக்கைத்தனமான

பதிவை இறக்கி வைக்க வேண்டிய கட்டாயம் .மக்கா மன்னிச்சிக்குங்க ................

Tuesday, October 20, 2009

யாசித்த கரக்காரி !!!!!!

குருதியிற் விளை பூச்செண்டு

பரிசளித்தும் பரிகசிக்கிறாள்

வேர்களின் நுனியிலென் இரத்தத்துளிகளை

உணராதவள் .காகிதமலரென.

.

பழங்கூரை ஈர்க்கின் நுனிதிரளும்

மேகமழலையை கைதட்டும் லாவகமுனக்கு

என் ரத்த அடர்த்தி கண்ணுமிழ்நீர் .

.

உன் ஹெம்லேக் மௌனவிடம்

என் சொற்சிசுவிற்கு புகட்டப்படுகிறது

பழைய மருத்துவக்கிழத்தியின்

கைப்பக்குவத்தோடு .....

.

நிராகரிப்பின் சூட்டுகோல் பட்டும்

நா வியர்க்கும் மிருகமென

மூன்றெழுத்து பெயரை

சுற்றுகிறது அருவமொன்று ..

.

உடற் கழன்ற பிராணனொன்று

துடிக்கிறது .....

இறந்தகுட்டியை மூக்கால்

அசைத்துணர்ந்து ஓலமிடும்

நாய்போல் .

.

பழைய ஒருத்தியின் யாசித்த

உள்ளங்கரம் முத்தமிட்டு அழவேண்டும்

எங்கே அவள் ???????????

குறிப்பு :

கொஞ்சம் தரம் குறைவாய் இருப்பின் பெருமக்கள் மன்னிக்க ....................

Friday, October 16, 2009

பேச்சிலர் டிகிரி- 4

வள்ளுவப்பேராண்மை இகழ்தலுக்காட்படும்


பிரம்மச்சர்யம் புசித்தவென் நிசிகள் .


பூமிதி விழாவின் தணல் துண்டங்களை


தளர்த்தி சென்றிருக்கிறாள் கனவுப்


பெண்ணொருத்தி உள்ளும் புறமும் .


முறுக்கேற்றப்பட்ட வீணை நரம்புகள்


சரணம் வாசிக்கும் வாய்ப்பற்றவை (?)


சதைப்புசிக்கும் மிருகத்தின் வளர்தல்


பாக்டீரியப் பெருக்கத்திற்கான தட்பம்

என் உடல் .


கனவினைக் கொலைத்துமதன் உழவுச்சேற்றில்


மிருகத்தின் கால்தடம் .


வாய்ப்பின் வழியடைத்த இரவில்

தற்கலந்தழியவும் தேவையாய்

கனவுப் பெண்ணுடல் ..................


குறிப்பு :

மேற்கண்ட கிறுக்கல் என்பது "முட்டை போண்டா "போன்றது முட்டைப்பொரியல் விரும்புபவர்கள் "நேசன் " கடைக்கு செல்லவும் .

நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் .

பாலா

Tuesday, October 6, 2009

மாமனுக்கு (சில தலைவலிகளும் என் புலம்பல்களும் )

நூறு அழகிகளுடனான தனியறையில் ஆண்மையற்றவன் படும் பாடு . உடல்முழுவதும் இதழ்களால் அர்ச்சித்தும் முயங்க இயலாதவனை வெளித்தள்ளி , "ச்சீ " என்று உமிழி கதவை பூட்டும் அவமானம் உன் கவிதையின் ஆரம்பத்தில் எனக்கு கிட்டியது .நீ அடித்து வளைத்து இறுக்கிப் போட்டிருக்கும் சொற்கூட்டுக்குள் எந்தவழி நுழைவதேன்றே தெரியாமல் திரும்பிச்செல்லும் கொடூரம் நிகழ்ந்திருக்கின்றன உன் பழைய சில கவிதைகளில் . இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் சில நல்ல தாசியைப்போல விருப்பமின்றியும் உன் வார்த்தைகளோடு ஓடியிருக்கிறேன் முன் தினங்களில் .
இப்போதும் நீ வளைந்து கொடுத்தாயா இல்லை நானே ஏறிக்கொண்டேனா என்ற குழப்பம் .
இப்போதெல்லாம் நீ குழப்பி அடித்திருக்கும் வண்ணச் சேற்றுக்குள் சிக்கிக்கொள் என்றே காலை நனைக்கிறேன் ..
சுயிங்கம் மெல்லும் ருசியானது உன் கவிதை அசைபோட்டு சாறு எடுத்தபின்னும் இருக்கும் சுயிங்கத்தின் அழுத்தம் உன் வார்த்தைக்குவியல் . சில கவிதைகளில் நிகழும் அர்த்தப்புரிதலுக்கு பின் சொல் மீதான அலட்சியம் நேர மறுக்கிறதுன் கவிதை -களில்

இப்போதொரு புதிய தலை வலி இது


சூரியனுக்கு ஒட்டிய கருஞ்சுருள்
ஆடி மீது நகரும்
ஆயிரம் கால் ரேடியச் சிலந்தி
நெய்தபடி நகர்கிறது நிழல் வலை

ஞாபக வலையை இப்படி காட்சிப்படுத்த இயலுமா என்ற கேள்வியை எழுப்பிடும் வேலையை அழகாக செய்கிறது இந்த வரிகள் .
( விலாங்கை பிடித்து விடலாம் போல . நீர் சொல்லரவாரத புரியரதுக்குள்ள )

டிராகன் நாவுகள் சூழ ஓட்டகமுடித் தூரிகையில்
எழுதிய சிறகுள்ள அதி மானுடப் பெண்
தைலமிட்டு வைத்திருக்கிறாள் காயத்தின் உதிரத்தை
நிறம் மாறாமல்


நினைவுகளின் நிர்வாணம் ,ரணம் .


நதி தளர்த்தியிருக்கும் மணல் வெளி
அந்தியின் வெம்மை அடைகாக்கிறது
கரிக்கும் அதிகாலை உதட்டில் மற்றும்சிமிழ் சுடரில்

நெகிழ்ந்த புடவையின் வழி அரைகுறையாய் கட்சிக்கு புலப்படும் மார்பக ஆரம்பத்தின் அழகு போல் தெரிகிறது நீ எழுதியிருக்கும் "நதி தளர்த்தியிருக்கும் மணல் வெளி "
வெம்மையை அடை காக்கும் விழி நீர் பூசிய உதடு சொல்கிறது உன் வலியின் எடையை

ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை
வாய் முன்னம் ஒற்றை முகில்
கார் வானமாய் விரிந்த கண்

நான் மிரண்டு போனது இங்கேதான் "ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை
கண்ணீரின் அடர்த்தி கடலுக்கு ஒப்பானதே . ஒத்துக்கொண்டே ஆக வேண்டும் .
கண்ணை இப்படியெல்லாம்(ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை ) சொல்ல முடியுமான்னு அரண்டே போனது இங்கேதான் அதிலும் " எரிமலை வாய் முன்னம் ஒற்றை முகில் "
அங்கயே விழுந்துட்டேன் . இமையை இப்படிலாம் சொல்ல முடியுமான்னு .

மார்புக் கூட்டு மரங்கொத்தி
சப்தம் கொல்ல கொல்ல உயிர்த்தெழும்
மரணத்தின் காலடி

அரிவாள் கருக்கு கொண்டு இதயத்தை கூறுபோட்டும் தீரவில்லை ரணத்தின் பசி .

திசை தீர வெடித்தெறிந்த தசைத்துண்டு கனவு
கடல்கோள் பிரேதத்தின் மீன்தின்றமீதத்தை
பகிர்கின்றன நகம் போல் அலகுள்ள பறவைகள்

என் உணர்ச்சியை காட்சிப்படுத்தும் வித்தை கைவரவில்லை மாம்ஸ் ஆனால் இந்த வரிகள் கிளப்பும் அதிர்வு மட்டும் இப்போதைக்கு அடங்கப்போவதில்லை எனக்கு .

(வார்த்தைகளை கழித்து வலியை மட்டும் பிரித்தெடுக்கும் சூத்திரம் கற்கவேண்டும் உன் கவிதைக்காக )

இதுவரையிலான மேலே உள்ளது எனக்கான புரிதல்கள் மட்டுமே படைப்பாளியின் கோணம்
என்னவென்று தெரிந்திருக்க எனக்கு சாத்தியமில்லை .
(என்னதப்புனு மாமாதேன் சொல்லணும் )

Friday, October 2, 2009

பருவநிலையறிக்கை

இறந்த காலம்

வியர்த்த நுதலுடன் மஞ்சள்

மணக்கும் மடி புதைய

ஈரத்தலைகலைக்குமுன் விரல்

.

.

நிகழ்ந்து போன இறந்த காலம்

முகிழ்த்த முகமயிரும் ,ஊறிய

ஆண்மையும் தொலைதேசச்

சொந்தமாக்கினவுன் மடியை

.

.

நிகழ்காலம்

அறிவின் வாள் ப்ரியத்தின்

துடிதுடிப்பைக் கூறு போடும்

சொற்கொடூரம் நிகழ்த்துகிறேன்

பின்னோக்கிய மனித பரிணாமத்தில்

குரைக்கும் மிருகப்படிநிலையில்

நின்றபடியுன்னிடம் ...

.

.

நிகழவிரும்பா எதிர்காலம்

உணராததை உண்டு ; முயங்கிய

பஞ்சனை போதையில் !!

எதிர்வினை மறுத்த உனதன்பென்னால்

பனைக்கழுவில் ஏற்றும் உற்சவப்

பெருவிழா நடத்தப்பெறலாம் !!

தங்கமுலை தந்தவளே

தயாராய் இரு அதுவரையில் !!!!!!!