கடலின் காதலன்

Sunday, August 9, 2009

பேச்சிலர் டிகிரி (பார்ட் டூ )

அண்டத்தின் நிசப்த இறகின்

மீட்டலால்மௌனம் நிரம்பிப்

பொங்கும் அறையில் மெல்லிய

கலங்கல்

வெப்பத்தென்றலைத் துப்பும்

மூன்றிறகு மின் விசிறி ,

மஞ்சள் எச்சில் உமிழும்

விடிவிளக்கு.

பூமிக்கருவின் சூர்ய நாவுகளை

மேற்சுவர் தரை தடவும்

மழையால் தணிக்க இயலுமா????

நிகழ்த்த முயன்று கொண்டிருக்கிறது

இயந்திர விசிறி !!!!!!!!

தீயை விழுங்கியவனை (அல்லது )

தீயால் விழுங்கப்பட்டவனை

எதிர்பாலற்ற தனிமை இரவின்

கொடுமைப்பிடி .

எரிகிறேன் உள்ளும் புறமும்

காதுமடலேறிய இரத்தமும்

காய்ந்த உதடுகளும் யாசிக்கின்றன

எதையோ என்னிடம் (!)

பிச்சையிட வழியற்றவனாய்

நான் .

இளமை மீட்டும் ராகத்திற்கு

வார்த்தை கோர்க்க இயலாமல்

கெஞ்சுகிறேன்

காலத்திடம்

என் இளமையை தின்றழி ,

இல்லையேல்

யாசிக்குமங்கங்களை முடமாக்கு ,

இயலாவிடில்

தயவு செய்து

எனைக்கொன்று விடு ............................

Monday, August 3, 2009

சொல்லாயுதங்கள்

வெளியில் சூரிய அபிஷேகம் .
மதிய எரிச்சல் .
ரௌத்ரம் முளைவிடும் சூழகம் .
வியாபிக்கும் வெப்பம் உள்ளும் புறமும் .

சிறு தூண்டலுக்கு காத்திருக்கும்
எரிவிளக்கா?!!
பசியோடுறுமும் மான்கண்ட
புலியா?!!
பிரசவிக்கும் முயற்சியில் எரிமலை
திரவக்குழம்புகளா?!!

எரிய, பாய ,வெடிக்க
ஆயத்த தருணம் .
ஆ ................................. வெடித்தேவிட்டது ........

பெயரிலி சொல்லாயுதங்கள்
பல்கூர்முனைகளும் , ரத்தம்
சுவைக்கும் நாவுகளும் கொண்டவை .

சமர்களத்தில் இருபுறமும்
ஆயுதப்பிரயோகம் .

இதய மேற்சுவரென்ன ?
உட்புறமென்ன?
கிழிந்து தொங்குகின்றன
இதயச்சதைகள்

ஆயுத நாவுகள் ரத்தம்
ருசித்து மடிந்து விழுகின்றன .

ரத்தத்தின் வீச்சமடிக்கும்
அறை முழுதும் நிரம்பி வழிகிறது
வன் மௌனம்

இரண்டொரு நாளிலந்த
"வன் மௌனம் " செத்தழியலாம்
பிறிதொரு நாளில் அவ்வாயுதங்கள்
உயிர்பெற்று மீண்டும்
இதயம் கிழிக்கலாம் ................................

பின் குறிப்பு .
ஒரு வாரம் முன்பு " மழைக்கு ஒதுங்கியவர் (பெண்கள் கல்லூரி பக்கம் ) கேட்டிருந்தார் திருவாரூரில் வெயில்காலமா வென்று .ரெண்டொரு நாளில் ஊருக்கு வந்தபின்தான் தெரிந்தது இப்போது நம்மூரில் அதிகம் இருப்பது வெயில் காலம் தானென்று . ஊருக்கு வந்த இரண்டாவது நாளே அம்மாவோடு சண்டை சாயந்தரமே சமாதானமாகி ஒரு வழியா முடிந்து விட்டது. இந்த கடல் காற்றும் ,கப்பல் தனிமையும் என் மேல் ஒரு மிருகத்தனமான பையித்தியகாரத்தனத்தை பூசிவைத்திருகிறது .இப்பொழுதே இப்படி என்றால் திருமணத்திற்கு பிறகு பஞ்சாயத்து வைக்கவேண்டி இருக்கும் போல( சாமி எல்லாம் தயாராஇருங்க) மேற்கண்ட கொலை வெறியில் மேற்மேற்கண்ட கவிதை மாதிரி ஒன்றை கிறுக்கித் தொலைத்தேன் .