ஏதோவொரு காட்சி பிழையின் தீவிரத்திலோ
தனிமையின் முயங்களிலோ
அதுவென்னுள் விழுந்து விட்டது போலும் !
(இதை அனுபவித்திருப்பீர் நீங்கள் )
என்னுள் தன் கிளைகளை
பரப்பி இருந்தது
என்புகள் நொறுங்கி
நரம்புகள் தெறித்துவிடும் போல் !
இழந்து கொண்டிருந்தேன்
அதனாளுமையின் வன்மையில்
வெட்கம் ,பசி இன்னபிற .....
எந்த முனிவனுக்கு தெரியும்
என் ஊசிமுனைத்தவ்ம் ??!!!!!
அங்கங்கள் வழி தீஒழுக
நின்றிருக்கிறானா அவன் ??!!!!
மார்பிலும் முகத்திலும்
மயிர்க்கால்களின் ஆளுமைக்கொண்ட
என்னால் கண்ணாலே
அழைக்கும் எவளுடனோ
அதை விட்டொழிக்க வழியிருந்தும்
கலாச்சார முட்கொம்பிலதை
கொன்று மாட்டி விட்டேன்
இனிமேலும் கொலைக்க
நான் தயாரில்லை
அடியே என்னவளே
எங்கிருந்தேனும் உடனே புறப்பட்டு வா !!