செம்புலப்பரப்பகழ் கிழங்கென பிரசவித்த
ப்ரியமெனும் தூயம் உனக்கேயானது ..
முலையூட்ட நாவறண்டழும் குழந்தைஎனும்
நானுக்கு
கிளாவர் கிலுகிலுப்பை நீட்டும் மரக்கரம் உனது.
பிரேதம் சூடி செருப்பு காலுக்குள் உடல் நசுங்க
தீர்ப்பிடும் கோல் உன்னது .
வியந்து கொள் நார்சிச நாயகி!!!! இதெற்கெல்லாம்
சேர்த்தழும் எவன் கையும் துடைக்கவியலா
உன் கண்ணீர் உனக்கேயானது .....
"" எதிர் பார்ப்பின்றி அள்ளித்தரும் நேயம் கபடறியாதது தோழி "" நேசமித்ரன்