ஒருநாள்
தார்ச்சாலை நான்முனை சந்திப்பின்
மஞ்சள் விளக்கு சமிக்ஞையாய்
நகர்த்தி விட்டிருக்கிறோம் நாட்காட்டி
தினங்களை !!!
.
பத்தங்குல நம்மிடைவெளியில் புதைந்து
கிடக்கிறது ஆதிமனித உணர்ச்சிகுறிப்புகள்
.
பாண்டி ஆடும் சிறுமி கைசிறகடித்து
மையநோக்கு விசை சமன் செய்யும்
வித்தை பழகி நிற்கிறேன் நமக்கான
ஒற்றை நூலிழைமுன் ...
................................................................................................................
இன்னுமொரு நாள்
மீட்டு நம்மிடை ஒற்றை
வயலின் இழையை
ஒவ்வொரு மீட்டலுக்கும்
பொடிந்து கொட்டுகிறது
இதயம்
...............................................................................................................
மற்றுமொருநாள்
தயவு செய்து பேசாமல்
எனை வதை !
ஊடலின் தேவமொழி
மௌனம் !
...............................................................................................................
குறிப்பு :
மேற்கண்டதில் முதற் கவிதை(?) அந்த ஒற்றை நூலிழை முன் தள்ளாடி கொண்டிருக்கும் மாப்பி செய்யதுக்கு !!..
தலைப்பில் இலக்கண பிழை இருப்பின் மேன் மக்கள் மன்னிக்க .......
தன்னை விலக்கி அறிய முடியுமா-2
6 hours ago